ராமநாதபுரம் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் தெரு நாய்களால் தொல்லை

ராமநாதபுரம் ராமேஸ்வரம் தங்கச்சி படத்தில் நாய்கள் கடித்ததில் நான்கு சிறுவர்கள் படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியின் நடுநாயகமாக விளங்கும் தங்கச்சிமடத்தில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வெறி நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தங்கச்சிமடம் விக்டோரியா நகர், எம்ஜிஆர் நகர் அந்தோணியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர் சிறுமியர்களை அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் கடித்துள்ளன. இதில் காயமடைந்த 4 சிறுவர், சிறுமியர் தீவிர சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு வெறி நாய்களையும், தெரு நாய்களையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story