ராமநாதபுரம் : கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி

ராமநாதபுரம் : கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி

பாய்மர படகு போட்டி 

தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை கடற்கரை பாலமுருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகு போட்டியில் தொண்டி, நம்புதாளை, திருப்பாலைக்குடி, மோர் ப்பண்னை, கோட்டைப் Uட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 26 படகுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு படகிற்க்கும் 6 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 6 கிலோ மீட்டர் கடல் மைல் தூரம் போட்டி நடைபெற்றது. அனைத்து நபர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். முதல் பரிசு 50 ஆயிரம், இரண்டாம் பரிசு 40 ஆயிரம், மூன்றாம் பரிசு 30 ஆயிரம் மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

Tags

Next Story