ராமநாதபுரம்: எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்:  எஸ்டிபிஐ கட்சியினர்  ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு பாசிஸ எதிர்ப்பு தினம் - 31 ஆண்டு கால அநீதி என்கிற முழக்கத்தோடு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் ரியாஸ் கான் தலைமையில் ராமநாதபுரம் சந்தை திடலில் நடைபெற்றது.

மாநிலத் துணை தலைவர் ரஃபிக் அஹமது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக கிழக்கு மாவட்ட செயலாளர் நஜ்முதீன் அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பெரியபட்டினம் நகர் தலைவர் பீர் முகைதீன் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோர் கண்டன முழக்கமிட்டார். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜெமிலுநிஷா, மாவட்டத்துணைத் தலைவர்கள் முகமது சுலைமான், சோமு, பொருளாளர் ஹசன் அலி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தவ்ளுத்தியா, மீனவர் அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் முத்தவா, விம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம், செயலாளர் சித்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தொண்டரணி மாவட்ட தலைவர் சகுபர் சாதிக், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஜலால், சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் நதீம், ஊடக அணி மாவட்ட தலைவர் சுபைர் ஆப்தீன், விவசாய அணி மாவட்ட தலைவர் கஜினி முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மண்டல முன்னாள் தலைவர் யாசின், திருவாடானை தொகுதி தலைவர் சிராஜுதீன், ராமநாதபுரம் கிழக்கு தொகுதி தலைவர் சுலைமான், ராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் மற்றும் நகர், தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், , பொதுமக்கள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

Tags

Next Story