ராமநாதபுரம் கடல் சாகசபயணம் நிறைவு

ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளின் கயாகிங் சாகச பயணம்
ராமநாதபுரம் இராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தீவை சுற்றி வரும் சவாலான கயாகிங் சாகச பயணம் இரண்டாவது நாளாக ஓலைக்குடா கடற்கரையில் இருந்து துவங்கியது. இந்த பயணத்தின் போது டெவில் பாயிண்ட் லைட் ஹவுஸ் வில்லுண்டு தீர்த்தம் போன்ற பல்வேறு கடல் பகுதிகளை கடந்து சென்றனர். அவர்களின் பயணத்தின் இடையே பாம்பன் பாலத்தில் உள்ள ஐ சி ஜி எஸ் மண்டபத்தின் கட்டளை குழுவினர் வரவேற்று உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பாம்பன் தூக்கு பாலம் வழியாக கயாக்கிங் வீரர்கள் கடந்து சென்று குந்து கால் துறைமுகத்தில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மீனவர்களுடன் சமூகத் தொடர்புடன் இரண்டாவது நாள் பயணம் நிறைவு பெற்றது . இந்த பயணத்தின் நோக்கம் கடலோர பாதுகாப்பு நிலையான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கடலின் பாதுகாப்பை குறித்து விழிப்புணர்வை கடலோர மக்களிடையே பரப்புவதற்காக என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story