ராமநாதபுரம் : மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் அனுப்பிவைப்பு

ராமநாதபுரம் கீழக்கரை நகராட்சி சார்பில்வெள்ளநிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு.
ராமநாதபுரம் கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் வேண்டுகோள் இணங்க கீழக்கரை நகராட்சி, ஊராட்சிகளில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காயல்பட்டினம் போன்ற ஊர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. நகரசபை தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில்,நகரசபை துணைத் தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் மற்றும் கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் சப்ராஸ் நவாஸ்பயாஸ்,முகம்மது ஹாஜா சுஐபு,பயாஸ் உள்ளிட்டோரின் ஒத்துழைப்போடு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கீழக்கரை நகராட்சியில் இருந்து 12 நகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளுக்காக வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story