இலங்கை மீனவர்கள் இந்திய துணை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட அறிவிப்பு!

ராமநாதபுரம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தை யாழ் மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட போவதாக அறிவிப்பு விடுத்துள்ளனர்.,
ராமநாதபுரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கடல் தொழில் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்து இருப்பது: இந்திய விசைப்படகுகள் எல்லை தாண்டி இலங்கை பகுதியில் அதிகமாக நுழைந்து கடல் வளத்தை அளிப்பதாகவும், இதனை இந்திய அரசு தடுக்க நினைத்தால் கடல் எல்லையில் இந்திய கடற்படை அதிகாரிகளின் நிப்பாட்டி எல்லை தாண்டி மீனவர்கள் வருவதை தடுத்து நிறுத்தலாம். ஆனால் இது போன்ற அவர்கள் செய்வதில்லை. மேலும் இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து கடல் வளத்தை முற்றிலும் அழித்து செல்வதாகவும் இதனை கண்டித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அலுவலகத்தை பிப்ரவரி 20ஆம் தேதி முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடல் தொழில் அமைப்புகள் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story