ராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் அறிவிப்பு

ராமநாதபுரம் மண்டபம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து குடி தண்ணீர் குடிக்க வைக்கும் போராட்டத்தை எஸ் டி பி ஐ கட்சியினர் அறிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ் டி பி ஐ கட்சியின் மண்டபம் பேரூராட்சி செயற்குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது எஸ் டி பி ஐ கட்சியின் பேரூராட்சி தலைவர் முகமது சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள் எஸ் டி பி ஐ மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவர் முகமது சுலைமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மண்டபத்தில் குடிதண்ணீர் உப்பு தண்ணியாக வருவதை கண்டித்து உப்பு தண்ணீரை பேரூராட்சி சேர்மன் மற்றும் அதிகாரிகளை குடிக்க வைக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை நாளை வெகு சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது கட்சியின் முடிவை தனித்தோ அல்லது கூட்டணியுடனும் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெற வைப்பது என தீர்மானிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயலாளர் அபுலா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்

Tags

Next Story