ராமநாதபுரம் தமிழக மீனவர்கள் 19 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமநாதபுரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகுடன் 19 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமநாதபுரம் இலங்கை யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு படகையும் அதிலிருந்து 19 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை செய்த பின்னர் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடனர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர் இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story