ராமநாதபுரம் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தால் கைது

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம்.
ராமநாதபுரம் மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் இருந்து திமுக தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்த சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்து கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய கேணிக்கரை போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மஹாளில் அடைத்தனர்.

Tags

Next Story