ராமநாதபுரம்: மூன்று பேர் கைது

ராமநாதபுரம்: மூன்று பேர் கைது

மூன்று பேர் கைது

ராமநாதபுரம் கீழக்கரை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் சாயல்குடி முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான சிக்கலைச் சேர்ந்த பிச்சை என்பவர் மகன் தனுஷ் பிரதாப் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் மகன் சூர்யா ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண் ஆகியோரை கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் உத்தரவின் பேரில் கீழக்கரை குற்ற பிரிவு சார்பு ஆய்வாளர் தென்கரை மகாராஜன் மற்றும் காவல்துறையினர் அதிவீரபாண்டியன் யாசர் அராபத் ராதாகிருஷ்ணன் வசந்த் ஆகியோர் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை கைது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story