ராமநாதபுரம் : தீப்பற்றிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

திருவாடானை அருகே ஏ.ஆர் மங்களத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பி உரசியதில் தீ பற்றி ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கே ஆர் மங்கலம் கிராமத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் ராஜ் என்பவர் தனது லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஏ ஆர் மங்கலம் அய்யனார் கோவில் அருகே வந்த பொழுது தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியலில் தீ பற்றியது தீன் மல மலவென எரியத் தொடங்கியதும் வண்டியில் இருந்தவர்கள் இறங்கி உயிரிழப்பினர்.

உடன் ஆர் எஸ் மங்கலம் தீ அணைப்பு நிலைய அலுவலர் கமலநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடிய நிலையில் தீயை அனைக்க முடியாததால் திருவாடானை தீ அணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு தீயை அனைத்தனர் . இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Tags

Next Story