ராணிப்பேட்டை: வியாபாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

ராணிப்பேட்டை: வியாபாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ராணிப்பேட்டை ஆட்சிகள் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தேர்தல் விழிப்புணர்வு கோலமிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று நடந்தது. அதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்துகொண்டு உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் ஆட்சியர் வளர்மதி பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அப்போது பணம் வாங்கிக் கொண்டு வாக்கு செலுத்தக் கூடாது. அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்வில் வருவாய்த் துறையினர் மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story