தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு

ராணிப்பேட்டை ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் சேர www.Skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிட்டர், மெக்கானிக், எந்திர வேலையாள், அரவை, சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர், டர்னர், ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் ஆப்டெஸ்டர் உள்பட பல பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெல்டர் பிரிவுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு ஆண்டு மற்றும் 2 ஆண்டு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது. 14 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும் தகவலுக்கு அரக்கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story