ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு முகாம்!

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு முகாம்!

கிரிக்கெட் அணி தேர்வு முகாம்

ராணிப்பேட்டையில் கிரிக்கெட் அணி தேர்வு முகாம் இன்று மற்றும் வருகிற 1-ம் தேதி நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் தலைவர் சந்தோஷ் காந்தி, செயலாளர் செல்வகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயது மற்றும் 16 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 வயதுக்கு உட்பட்ட அணியை தேர்வு செய்வதற்காக சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி அளவில் ராணிப்பேட்டை பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் 1-9-2008 அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். அதேபோல 14 வயதுக்கு உட்பட்ட அணியை தேர்வு செய்வதற்காக சிறப்பு முகாம் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி காலை 8 மணி அளவில் ராணிப்பேட்டை பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் 1-9-2010 அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருத்தல் வேண்டும். எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story