ராணிப்பேட்டை: மாவட்ட திறன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட திறன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. அப்போது இண்டஸ்ட்ரி 4.0 டெக்னாலஜி மையம் வளர்ச்சி குறித்தும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை குறித்தும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான குறுகிய கால பயிற்சி மேற்கொள்ளுதல் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆட்சியர் கேட்டறிந்து அதனை மேம்படுத்த அறிவுரைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் திறன் பயிற்சி உதவி இயக்குனர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், சிறு ஒரு நடுத்தர தொழில் சங்க உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story