ராணிப்பேட்டை: 55 போலீசார் பணியிட மாற்றம்!

ராணிப்பேட்டை: 55 போலீசார் பணியிட மாற்றம்!

எஸ்பி கிரண் ஸ்ருதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 55 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணி புரிந்த 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 55 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அவளூர் காவல் நிலையத்தில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவண மூர்த்தி கலவைக்கும், கலவை காவல் நிலையத்தில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் தக்கோலத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 55 பேர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story