சிவகிரி அருகே மின்னல் தாக்கி ரானுவ வீரர் உயிரிழப்பு

சிவகிரி அருகே மின்னல் தாக்கி ரானுவ வீரர் உயிரிழப்பு

உயிரிழந்த ராணுவ வீரர்


தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டினம் பகுதி வ.உ.சி.தெருவை சார்ந்த தங்கராஜ் என்பவரது மகன் 26 வயதுடைய மகாலிங்கம். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகாராஷ்டிராவில் பணிபுரிந்து தற்சமயம் விடுமுறையில் தேவிபட்டினம் பகுதிக்கு வந்த அவர் அவரது சொந்த வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இவருக்கு திருமணம் முடிந்து ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் இவர் இந்திய ராணுவத்தில் அக்டிங் லாங் தபேதர் பொறுப்பில் இருந்து பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் விடுமுறை தினத்தை கழிக்க வந்த ராணுவ வீரர் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென மின்னல் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story