மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்; நடவடிக்கை எடுக்க மனு

மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்; நடவடிக்கை எடுக்க மனு

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 4ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர், அதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் தங்களது உறவினரான தங்கை சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரை, அதே ஊரைச் சேர்ந்த பரமேஸ்வரன் மகன் சந்திரசேகர் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை உறவினர்கள் பார்த்த போது, சந்திரசேகர் தப்பி ஓடி உள்ளார், அதனைத் தொடர்ந்து இது குறித்து மங்களமேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த போது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தவர்கள் ஒரு மாத காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நவம்பர் 1ம் தேதி புகார் மனு அளித்துள்ளனர், அதற்கு நடவடிக்கை இல்லை என்பதால், தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டியும், சம்பந்தப்பட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story