ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை


ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.


ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின. ராசிபுரம் வேளாண்மை உற்பத் தியாளர்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆர்சிஎம்எஸ்) சார்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஆர்சிஎச் ரகம் 1,385 மூட்டைகள், டிசிஎச் ரகம் 3 மூட்டைகள், கொட்டு ரகம் 50 மூட்டைகள் என மொத்தம் 1,433 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஆர்சிஎச் ரகம் குறைந்த பட்சமாக குவிண்டால் ரூ. 6,889 முதல் அதிகபட்சமாக ரூ. 7,401 வரை விற்பனையானது. டிசிஎச் ரகம் குவிண்டால் ரூ. 10,003 -க்கு விலை போனது. கொட்டு ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 3,595-முதல் அதிகபட்சமாக ரூ. 5,295 க்கும் ஏலம் மூலம் விற்ப னையானது. மொத்தம் ரூ. 35 லட் சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடை பெற்றது.

Tags

Next Story