நவராத்திரி : ராசிபுரம் ஸ்ரீ பட்டத்துளசி அம்மனுக்கு அபிஷேகம்..!

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டத்துளசி அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கன்னையா தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டத்துளசி அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு பூஜை 6ம் நாள் முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், பார்வதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த நவராத்திரி சிறப்பு பூஜையில், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story