ராசிபுரம்: சிறு கதைகள் நூல் வெளியீட்டு விழா

ராசிபுரத்தில் க.வை.இராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நம்பர்.3, கொமாரபாளையம் பகுதியில் சிறு கதைகள் நுால் வெளியீட்டுவிழா நடைபெற்றது. பேராசிரியர் கே.சங்கரன் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஜவுளி உற்பத்தியாளர் மாணிக்கம், க.வை.இராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதை புத்தகத்தை ஜவுளி உற்பத்தியாளர் சுந்தரத்திற்கு முதல் புத்தகமாக வழங்கினார். இந்த சிறுகதைகளை நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் நெ.3.கொமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலவலர் (BDO., Rtd) க.வை.இராமகிருஷ்ணன் சிறப்பாக எழுதியுள்ளார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விழாவின் முடிவில் இராசிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சிதம்பரம் நன்றியுரை கூறினார்.

Tags

Next Story