ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர் ,பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் காப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரனை காண்பிக்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் பூசாரி மணி, ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story