மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் 

கார்த்திகை மாதம் மூன்றாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில், ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் காட்சியளித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி கார்த்திகை மாதம் மூன்றாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனை வணங்கிச் சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story