ராசிபுரம் : நித்திய சுமங்கலி மாரியம்மன் ஐப்பசி திருவிழா தொடக்கம்..!

ராசிபுரம் : நித்திய சுமங்கலி மாரியம்மன் ஐப்பசி திருவிழா தொடக்கம்..!

ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் ஐப்பசித் திருவிழா ஆரம்பம் 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் ஐப்பசி திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கோவில் திருவிழா பூச்சாற்றுகளுடன் சிறப்பாக நடைபெறும். அதன்படி, வருகின்ற செவ்வாய்க்கிழமை பூச்சாற்றுதல் நிகழ்வு நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக ஐப்பசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவில் பூசாரிகள், மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து ஸ்ரீ நித்ய சுமங்கலி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

Tags

Next Story