நேரத்திற்கு திறக்காத ரேஷன் கடை - கால் கடுக்க காத்திருக்கும் மக்கள்

நேரத்திற்கு திறக்காத ரேஷன் கடை - கால் கடுக்க காத்திருக்கும் மக்கள்

காத்திருக்கும் கிராம மக்கள் 

சிவகங்கை மாவட்டம், பழையனுார், குருந்தன்குளம், அழகுடையான் உள்ளிட்ட கிராமங்களுக்கான ரேஷன் கடையும், ஓடாத்துார் கிராமத்திற்கான ரேஷன் கடையும் பழையனுாரில் செயல்பட்டு வருகிறது. முழு நேர பழையனுார் ரேஷன் கடையில் 670 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை கடை திறந்திருக்கும், ஆனால் காலை 11:00 மணி வரை ரேஷன் கடை திறக்கப்படவே இல்லை. இதனால் கிராமமக்கள் பொருட்கள் வாங்க வரிசையில் காத்து கிடந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்: கடையில் பொருட்கள் வழங்கும் போதே வாங்க வேண்டும், இல்லாவிட்டால் பொருட்கள் இல்லை என திருப்பியனுப்பி விடுவார்கள், மாதத்தில் முதல் வாரத்தில் பொருட்கள் வழங்கப்படும் என்பதால் காலை முதல் காத்து கிடக்கிறோம், என்றனர்.

Tags

Next Story