புதிய நியாயவிலைக்கடை திறப்பு

புதிய நியாயவிலைக்கடை திறப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், நரசமங்கலம் மதுரா வெங்கட்ராயபுரம் கிராமத்தில் 16.50 லட்சம் மதிப்பில் நியாய விலை கடையை எம்எல்ஏ ஓ ஜோதி திறந்து வைத்து பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் நரசமங்கலம் மதுரா வெங்கட்ராயபுரம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஒன்றிய 15 வது மானிய பொது நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு எளிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி வெல்லும் பொங்க தமிழக அரசு வழங்கும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூபாய் ஆயிரம் ரொக்கம் அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜூ, ஒன்றிய குழு துணை தலைவர் நாகம்மாள் குப்பன் ,வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கர் , செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா விஜயரங்கன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி ஒன்றிய குழ உறுப்பினர் தயாளன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மதியழகன், மாவட்ட அயலக அணி துணை தலைவர் கார்த்திகேயன் ஒன்றிய பொருளாளர் நெமிலி ரவி ,ஒன்றிய துணை செயலாளர்கள் லோகநாதன், ஏகாம்பரம், சத்யா, பெருமாள் மற்றும்,அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story