ரவடியின் கூட்டாளி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

ரவடியின் கூட்டாளி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

 தூக்கிட்டு தற்கொலை

திருமழிசை அருகே ரவடியின் கூட்டாளி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
திருமழிசை காவல்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(24). இவர் கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படுகொலை செய்யப்பட்ட திருமழிசையைச் சேர்ந்த பிரபல ரவுடி எபினேசரின் கூட்டாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.கடந்த 10 நாட்களாக வழக்கு சம்பந்தமாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்னையால் சதீஷ் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story