மீண்டும் வைகை நீர் திறப்பு: இனி தண்ணீர் தட்டுப்பாடு இல்லை

மீண்டும் வைகை நீர் திறப்பு: இனி தண்ணீர் தட்டுப்பாடு இல்லை

வைகை நீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மானாமதுரைக்கு இனி தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைகை நீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மானாமதுரைக்கு இனி தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மழையின் காரணமாக வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசனத்திற்காக ஆற்றில் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு போர்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படும் ராஜகம்பீரம் பகுதியில் தண்ணீர் பரவலாக செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story