பழனி அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்காக புதிய அரங்கம் அமைப்பு

பழனியில் போட்டித்தேர்வர்க்களுக்கான படிப்பறங்கம் தமிழக அரசால் பழனி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பழனியில் போட்டித்தேர்வர்க்களுக்கான படிப்பறங்கம் தமிழக அரசால் பழனி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.‌ இது தற்போது நடைமுறையில் உள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான சுற்றுச்சூழல் போன்ற நவீன வசதிகளுடன் இருக்கிறது.

மாணவர்கள் பயன்படுத்துகொள்ளவும். அனைத்து போட்டித்தேர்வு புத்தங்களும் இங்கு உள்ளது .(அங்கு இருக்கும் புத்தங்கள் வீட்டுக்கு எடுத்துசென்று படிக்க அனுமதி இல்லை). மாணவர்கள் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். நகல் எடுத்துக் கொள்ளலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த அனைத்து போட்டித் தேர்வுகளுடைய கேள்வி வினாக்களும் எங்கு உள்ளன. இதற்கான ஆலோசனைகளும் ஆசிரியர்களும் அவ்வப்போது வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story