ராஜீவ் ஜோதி யாத்ரா குழுவினருக்கு வரவேற்பு!

ராஜீவ் ஜோதி யாத்ரா குழுவினருக்கு வரவேற்பு!

ஜோதி ஓட்டம் 

விராலிமலைக்கு வந்த ராஜீவ் ஜோதி யாத்ரா குழுவினருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பளித்தனர்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவு தினம் ஸ்ரீபெரும்புதூரில் வரும் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. காந்தி ஜோதி யாத்ரா கமிட்டி தலைவர் துரை தலைமையில் இதை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் ஜோதி ஓட்டம் தொடங்கியது.

இந்த குழுவினர் மதுரை, மேலூர் வழியாக நேற்று விராலிமலை வந்தனர். சோதனைச்சாவடி பகுதியில் காங்கிரஸ் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் திருச்சியை நோக்கி புறப்பட்டு சென்றனர். வரும் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதுரில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையிடம் ஜோதியை ஓப்படைக்கவுள்ளனர். நிகழ்ச்சியில் நகர தலைவர் கருப்பண்ணசாமி, கரூர் லோக்சபா தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கணேசன் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story