ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 100 கோடி மதிப்பிலான 2.4 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. 

மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 100 கோடி மதிப்பிலான 2.4 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி வட்டம் மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான குளம் ஒன்று இருந்து வந்தது இந்த குளத்தை மூடி சிலர் வணிகப் பயன்பாடு மற்றும் வீடுகள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வருவாய்த்துறை அமைச்சர், செயலாளர் மாவட்ட ஆட்சியர் உட்பட மற்றும் மாவட்ட வருவாய் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்து இருந்தனர்.

அதன்படி இன்று காலை பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில், வருவாய்த்துறையினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர். இதில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் 4 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

Tags

Next Story