திருவண்ணாமலை: PhonePe மூலம் இழந்த பணம் மீட்பு

திருவண்ணாமலை: PhonePe மூலம் இழந்த பணம் மீட்பு

PhonePe மூலம் இழந்த பணம் மீட்பு

விரைவாக விசாரணையில் பணம் மீட்கப்பட்டது
.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா, குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (30) க/பெ மணிகண்டன்என்பவர் கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவர் தனது மொபைல் மற்றும் வங்கி பாஸ்புக்கை மாமியார் வீட்டில் வைத்து விட்டு தன் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரது கணக்கிலிருந்து தெரியாத நபர் PhonePe வழியாக மொத்தம் 5.2,10,200/- திருடியுள்ளார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் உத்தரவின்படி, விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சந்தேக நபரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, பின்னர் PhonePe கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு 05.12.2023-16 சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி அவர்களால் புகார்தாரர் இழந்த முழு தொகையும் ரூ 2,10,200/- திரும்ப வழங்கப்பட்டது.

Tags

Next Story