அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

பெண் சடலம் மீட்பு 

செங்கம் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அடுத்த தானகவுண்டன்புதூர் பள்ளகொள்ளை கிராமத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர் .விசாரணையில் இறந்தவர் கரியமங்கலம் பகுதியை சேர்ந்த சரோஜா (வயது 60) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

Tags

Next Story