ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகை மீட்பு

ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகை மீட்பு

ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகை மீட்பு

திண்டுக்கல்லில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்க நகையை மீட்டு ஆட்டோக்காரர் முன்னிலையில் உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நேற்று தனியார் திருமணம் மண்டபத்தில் இருந்து பேருந்து நிலையம் சென்ற ஆட்டோவில் தனது பையை மறந்து விட்டார் .மதுரைக்கு சென்று விட்டார். அந்தப் பையில் 6 1 /2 பவுன் தங்க நகை இருந்தது பை காணாமல் போனது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் ராஜசேகர் புகார் அளித்தார். வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர் . அப்போது ஆட்டோ டிரைவர் ராஜசேகர் என்பவர் தனது ஆட்டோவில் இருந்த பையை மறந்து சென்றவர் திருப்பி வந்து கேட்டால் கொடுத்துவிடலாம் என்று வைத்திருந்தார். உடனடியாக நகர் வடக்கு காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை காவல் நிலையம் அழைத்து சென்று காவல்துறையினர் முன்னிலையில் உரியவரிடம் 6 1/2 பவுன் நகையுடன் கூடிய பையை ஒப்படைத்தனர்.

Tags

Next Story