கேவி குப்பம்: வாலிபர் இழந்த ரூ.2 லட்சம் மீட்பு

கேவி குப்பம்: வாலிபர் இழந்த ரூ.2 லட்சம் மீட்பு

பணம் மீட்பு

கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஆன்லைனில் இழந்த பணத்தை போலீசார் மீட்டு கொடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (27). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 997-ஐ மோசடி செய்தனர்.

இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மீட்டு, அவரது வங்கி கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்பட்டது.

பணம் மீட்கப்பட்ட ஆவணத்தை கார்த்திக்ராஜாவிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஒப்படைத்தார். அப்போது கூடுதல் எஸ்பி கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் புனிதா, சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story