ரூ.4 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு!

ரூ.4 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு!

இந்து சமய அறநிலையத்துறை

இலுப்பூர் அருகே ரூ.4 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு.
இலுப்பூர் அருகே ராப்பூசல் கிராமத்தில் தாயுமானவர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 122.8 ஏக்கர் பரப்புள்ள நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்ரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து நிலத்தை ஆக்கிரமித்த வர்கள் தாமாக முன்வந்து திருக்கோயில் வசம் நிலத்தை ஒப்படைப்பதாகவும், இந்து சமய அறநி லையத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். அதன்பேரில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு இந்து சமய அறநிலையத் துறை புதுகை உதவி ஆணையர் அனிதா, கோயில் நில மீட்பு தாசில்தார் வனிதா, செயல் அலுவலர் கார்த்திக்கேயன் ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story