நாகையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

  நாகையில் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலைத்துறை மீட்டனர். 

நாகையில் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலைத்துறை மீட்டனர்.

நாகப்பட்டினம் அடுத்த புத்தூரில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் சொக்கலிங்கம் பிள்ளை அன்னசத்திரம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. இந்த நிலையில் சொக்கலிங்கம் பிள்ளை சத்திரத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரம்பு செய்தனர். இதனை அடுத்து சொக்கலிங்கம் அறக்கட்டளை கைங்கரிய சபா தலைவர் சண்முகம் நாகப்பட்டினம் மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசனிடம் இடத்தை மீட்க கோரி புகார் அளித்தனர்.

இதனையடுத்து இன்று இணை ஆணையர் குமரேசன் தலைமையில் துணை ஆணையர் ராணி மற்றும் தனி வட்டாட்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான 17 ஏக்கர் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட இந்த இடம் தற்போது ஒரு கோடி ரூபாய் சந்தை மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் சொக்கலிங்க அன்ன சத்திரத்திற்கு சொந்தமான இடம் என விளம்பர பலகை வைத்தனர். சொக்கலிங்கம் அறக்கட்டளை கைங்கரிய சபாதலைவர் சண்முகம், செயலாளர் , பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story