மதுரையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு

மதுரையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு

மதுரையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு

தேர்வின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை நகர் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு டிச.,16 ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், பெறாதவர்கள், 20 -40 வயது இருபாலர்கள் பங்கேற்கலாம். ஆண்கள் உயரம் 165 செ.மீ., பெண்கள் 155 செ.மீ., இருக்க வேண்டும். என்.சி.சி., விளையாட்டு வீரர்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விருப்பமுள்ளோர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இன்று(டிச.,13) காலை 10:00 மணி முதல் நாளை மாலை 6:00 மணி வரை விண்ணப்பம் பெறப்படும். தேர்வுக்கு வரும்போது அசல், நகல் சான்றிதழ்கள், 2 போட்டோ, ஆதார் அசல், நகலுடன் வரவேண்டும். ஏற்பாடுகளை கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

Tags

Next Story