நாய்க்கடி ஊசி போட மறுப்பு; செம்மஞ்சேரி மக்கள் தவிப்பு

செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்க்கடிக்கு ஊசி போட மறுப்பு தெரிவிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்படும். இந்த மருத்துவமனை சென்னை மாவட்டத்தில் உள்ளது. சில அடி துாரத்தில், செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதுவும் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இரு பகுதிகளிலும் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகம். நாய்க்கடியால் பலர், இரண்டு மருத்துவமனையிலும் தடுப்பூசி செலுத்த செல்கின்றனர்.

ஆனால், மாவட்ட எல்லையை காரணம் காட்டி, தடுப்பூசி செலுத்தாமல் திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. வெறி நாய்கடிக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊசி போடாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை, பணியாளர்கள் உணர்ந்தும், இதுபோல் செய்வது கண்டிக்கத்தக்கது.

Tags

Next Story