உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்திற்கு மறுப்பு: வாலிபர் மீது வழக்கு!

உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்திற்கு மறுப்பு: வாலிபர் மீது வழக்கு!

வழக்கு

அணைக்கட்டு அருகே உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கும், வேப்பங்குப்பம் அருகே உள்ள குருராஜபாளையத்தை சேர்ந்த முஜாமின் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது வாலிபர், அந்த பெண்ணிடம் உனது கணவர் உனக்கு ஏற்ற நபர் அல்ல. நான் உன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து வாலிபருடன் அந்த பெண் நெருங்கி பழகினார்.

அவ்வவ்போது இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. வாலிபர் அந்த பெண்ணிடம் கணவரை விட்டு பிரிந்து வரும்படி வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் ஏமாற்றம் அடைந்த முஜாமின் கணவரை விட்டு பிரிந்து வராவிட்டால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படம், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கிடையே தனது மனைவிக்கு வேறு வாலிபருடன் பழக்கம் இருப்பதை அறிந்த கணவர் அவரை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார். பின்னர் அவர் விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முஜாமினுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரின் பெற்றோர் செய்துள்ளனர்.

இதையறிந்த அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதற்கு முஜாமின் மறுப்பு தெரிவித்து உள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் முஜாமின் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story