கடலரிப்பால் சேதமான அரயந்தோப்பு கடலோர சாலை சீரமைப்பு   

கடலரிப்பால் சேதமான அரயந்தோப்பு கடலோர சாலை சீரமைப்பு    
சாலை திறந்த எம் எல் ஏ 
கடலரிப்பால் சேதமடைந்து மாநில நெடுஞ்சாலை துறையால் சீரமைக்கப்பட்ட அரயந்தோப்பு சாலையை எம்,எல்.ஏ ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.
குமரி மாவட்டம் தேங்காபட்டணத்தில் இருந்து ராமன்துறை வழியாக இனயம் பகுதிக்கு செல்லும் சாலையில் கடலரிப்பால் சேதமடைந்து மாநில நெடுஞ்சாலை துறையால் சீரமைக்கப்பட்ட அரயந்தோப்பு சாலையை எம்,எல்.ஏ ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். சாலையை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சேக்முகமது, குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரடி கென்னடி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள் அக்பர் அலி, ஸ்டாலின், ராஜகிளன், வார்டு கவுன்சிலர் கிளீட்டஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story