இறந்தவர் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்

இறந்தவர் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்

சாலை மறியல் 

வையம்பட்டி அருகே சுடுகாட்டு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்தவர் உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வையம்பட்டியை அடுத்த தவளவீரன்பட்டியில் 70 வயது முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய உள்ள சுடுகாடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இறந்தவர் உடலை எடுத்து வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாகனத்தோடு அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார், வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். மேலும் சுடுகாடு பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story