தஞ்சையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விடுவிப்பு

தஞ்சையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விடுவிப்பு

கோப்பு படம் 

தஞ்சையில் உரிய ஆவணம் ஒப்படைக்கப்பட்டதால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விடுவிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக, தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கென 72 பறக்கும்படை குழுக்களும், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மார்ச்.25 திங்கள்கிழமை அன்று தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது கனரக வாகனத்தை சோதனை செய்ததில்,

தேர்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ.88,420/- ரூ.98,000,/- ரூ.59,750/- ரூ.64,000/- மற்றும் ரூ.5,88,000/-என மொத்தம் ரூ.8 லட்சத்து 98 ஆயிரத்து, 170 பறிமுதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படியும் தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல்முறையீடு குழுவில் உரிய ஆவணங்களை சமர்பித்து விடுவித்துக்கொள்ள ஏதுவாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், மாவட்ட அளவில் தினசரி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

எனவும் தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story