தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.18.55 லட்சம் விடுவிப்பு 

தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.18.55 லட்சம் விடுவிப்பு 

பைல் படம் 

தஞ்சாவூரில் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.18.55 லட்சத்திற்கு முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது;

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் அமலில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கென 72 பறக்கும் படைகுழுக்களும், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படைகுழு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது கனரக வாகனத்தை சோதனை செய்ததில், தேர்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ 74,000/- ரூ.59,000 /- ரூ.7,46,800 ரூ.60,250 /- ரூ.73,000/- ரூ66,000/- ரூ.97,000/- ரூ.3,69,000 /- ரூ.68,300/- ரூ.69,090 /- ரூ.78,600 /- மற்றும் ரூ.94,400 /- என மொத்தம் ரூ.18 லட்சத்து 55 ஆயிரத்து 440 பறிமுதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏப்.17 புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் படியும் தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story