நிவாரண உதவி

நிவாரண உதவி

நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹஜ் உம்ரா சர்வீஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடல் வாவர் பள்ளி எதிரில் உள்ள அர்-ரஹீம் ஹஜ் உம்ரா சர்வீஸ் கிளை உரிமையாளர்கள் பசீர் மற்றும் வாட்டர் ஹனீபா தங்களது அலுவலகத்தில் வைத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதல் கட்டமாக 100 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கிட் தொகுப்புகளை எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானியிடம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் கனி, முன்னாள் பாளை தொகுதி தலைவர் சலீம் பகுதி நிர்வாகிகள் ஹக்கி மூசா காஜா,தொழிற்சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் பாஷா, சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஹனீஃபா , முன்னாள் மாவட்ட செயலாளர் ஜவுளி காதர்,வார்டு நிர்வாகிகள் கௌது ,இபாதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story