திமுக சாா்பில் நிவாரண உதவி

திமுக சாா்பில் நிவாரண உதவி

திமுக சாா்பில் நிவாரண உதவி

தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால் சாம்பவா்வடகரை மற்றும் சுரண்டை பகுதியில் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு திமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்களை தென்காசி தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளா் வே.ஜெயபாலன் வழங்கினாா். சாம்பவா்வடகரை பேரூராட்சி மன்றத் தலைவா் சீதாலெட்சுமி முத்து, சாம்பவா்வடகரை நகர திமுக செயலா் முத்து, திமுக நிா்வாகிகள் ராமச்சந்திரன், சுப்பிரமணியன், சங்கரநயினாா், ஜேசுராஜன், முத்துப்பாண்டியன் உள்பட பலா் உடனிருந்தனா்.

Tags

Next Story