திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கல்

திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கல்

நிவாரண உதவி வழங்கிய திமுகவினர்

தீப்பிடித்து சேதமான வீட்டிற்கு திமுக நிர்வாகிகள் சார்ப்பில் நிவாரணம் உதவி வழங்கி ஆறுதல் கூறினர்
சின்னசேலம் அடுத்த லட்சியம் ஊராட்சி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், முருகப்பிள்ளை, அஞ்சலை, செல்வராஜ் ஆகியோரது 3 வீடுகளும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. அவர்களின் குடும்பத்திற்கு கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தெற்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், மாவட்ட பிரதிநிதி பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலையில், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் சுரேந்திரன், ஊராட்சி தலைவர் சக்கரவர்த்தி, கிளை செயலாளர்கள் பழனிவேல், வேலாயுதம், வி.ஏ.ஒ., பழனிவேல் ஆகியோர் அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறினர்.

Tags

Next Story