வின்ஸ் கல்வி நிறுவனம் சாா்பில் 290 பேருக்கு நிவாரண உதவி

வின்ஸ் கல்வி நிறுவனம் சாா்பில் 290 பேருக்கு நிவாரண உதவி
மழை நிவாரண உதவி வழங்கல்.
வின்ஸ் கல்வி நிறுவனம் சாா்பில் 290 பேருக்கு முன்னாள் எம்.பி நிவாரண உதவிகள் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, திருப்பதிசாரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டோரில் 290 பேருக்கு வின்ஸ் பொறியியல் கல்லூரி சாா்பில் தலா ரூ.ஆயிரம் வீதம் நிவாரண நிதி நேற்று வழங்கப்பட்டது. கன்னியாகுமரி எம்எல்ஏ என். தளவாய்சுந்தரம் முன்னிலையில், வின்ஸ் கல்வி நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்.பியுமான நாஞ்சில் வின்சென்ட் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் முத்துக்குமாா், திருப்பதிசாரம் ஊராட்சித் தலைவா் சிந்துமதி, அதிமுக மீனவரணி இணைச் செயலா் பசிலியான் நசரேத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த கல்வி நிறுவனம் சார்பில் ஏற்கனவே முதல் கட்டமாக, கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட கோவளம் கே.எஸ்.எஸ். நகரில் 44 மீனவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 2.20 லட்சம் கடந்த டிச. 24 ஆம் தேதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்ததாகும்.

Tags

Next Story