யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி

யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி
யானைகளால் சேதமடைந்த வயல்கள் 
யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வனசரகத்திற்குள்பட்ட பகுதிகளில் யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. கடையநல்லுாா் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் யானைகளால் சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகள் 11 பேருக்கு வனத்துறை சாா்பில் தலா ரூ.80 ஆயிரத்துக்கான காசோலையை, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் வழங்கினாா். இதில், கடையநல்லுாா் வனச்சரகா் சுரேஷ் ,வனவா்கள் முருகேசன், அம்பலவாணன், ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story