மாப்பிள்ளையூரணியில் குடியிருப்பை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்

மாப்பிள்ளையூரணியில் குடியிருப்பை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்

நிவாரண பொருட்கள் வழங்கல்

மாப்பிள்ளையூரணி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள்  நிவாரண உதவிகளை வழங்கினர்.

கடந்த டிசம்பர் மாதம் 17-18 தேதிகளில் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் பகுதியில் வெள்ள சேதம் ஏற்பட்டு பலர் குடியிருப்பு வீட்டை விட்டு வெளியேறினர்.

நான்கு வாரங்களுக்கு மேலாகியும் வீட்டில் புகுந்த மழைநீர் வடியாமல் மீண்டும் குடியமர முடியாமல் பல குடும்பங்கள் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். அக்குடும்பங்களுக்கு உதவி புரியும் எண்ணத்துடன் ஓய்வு பெற்ற விஜயா வங்கி ஊழியர்கள் இன்று அப்பகுதிக்கு நேரில் சென்று அக்குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்களுடன் நிவாரண தொகையையும் வழங்கினார்கள்.

எஸ்.நாராயணன் ஜி.நாராயணன்.எஸ்.எம்.ஜி.இளங்கோ மந்திரம் ஆகியோருடன் நகர வங்கி ஊழியர் சங்க செயலாளர். ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகைகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாளமுத்துநகர் கிளை செயலாளர் மி.அந்தோணி செளந்தராஜன் கட்சியின் மாவட்ட பொருளாளர் த.சுப்பிரமணியன் கட்சியின் வழக்கறிஞர் பெ.கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேர்வு செய்து நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்தார்கள்.

Tags

Next Story